மெய்யூரில் இன்னும் பிரச்னை முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்னை சென்றுகொண்டு உள்ளது. யாதவ பெண்கள் மீது தாக்குதல், யாதவர்களை தொழில் செய்யவிடாமல் முடக்குதல், நில அபகரிப்பு மற்றும் கொலைமிரட்டல் விடுத்தல் என பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். ராமதாசை அழைத்து வந்து கட்சி ஒன்றைத் துவங்கி, அழகுமுத்துக் கோனின் குருபூஜைக்கு அவரை தலைமை தாங்கவும் அழைத்து வந்த எம் வி சேகர் அவர்களோ… அல்லது சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரு.தேவநாதன் அவர்களோ… (தனது உண்ணாவிரத போராட்டத்திற்கும் அழகுமுத்துக்கோனின் குருபூஜைக்கும் இவரும் ராமதாசை அழைத்துள்ளார்) தனது கூட்டணியில் தலைவராக இருக்கும் சாதி வெறி பிடித்த ராமதாசை நேரடியாக மெய்யூர்க்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி இரு சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ வழி செய்வார்களா?
மக்களின் பிரச்சனைக்கு ஒன்று கூடாமல், தங்களின் லாபத்திற்காக பெருமைகளுக்காக ஒன்றுகூடுவதுதான் தலைவர்களின் இலக்கணமா?
யாதவ இளம் சிங்கங்களே நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் !
இப்பிரச்சனையில் தாமோதரன் என்ன செய்தார் என நீங்கள் கேட்கலாம், அதையும் குறிப்பிட கடமைபட்டுள்ளேன். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக எனக்கு தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட யாதவனை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். மேற்கொண்டு நான் அவர்களோடு இருப்பதாக கூறி தைரியபடுத்தி உள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இப்போது நாம் அங்கு செல்வது சரியல்ல என்பதாலும் நேரில் செல்ல இயலவில்லை. அவருக்கு சென்னையில் தங்கவும் வேலை பெற்றுத்தரவும் உறுதி அளித்துள்ளேன். அவ்வப்போது அதிகாரிகளிடமும் அவ்வூர் மக்களிடமும் நிலைமை யாதென கேட்டு வருகிறேன். வன்னியர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவலும் நமக்கு கிடைத்துள்ளது. எதையும் சட்டரீதியில் எதிர்கொள்ளவே நாம் விரும்புகிறோம். மீறி அராஜக முறையில்தான் தீர்வு வேண்டும் என வன்னியர்கள் எதிர்பார்ப்பார்கள் எனில் அதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
பிற தலைவர்களின் நிலை என்ன?
எப்போது மக்களை நேரடியாக சந்திக்கப் போகின்றனர்?
இனியும் ராமதாசோடு கைகோர்த்து திரிவது சரியா ?
என் யாதவ சமுதாயத்தை பிறரிடம் அடகுவைக்கும் அனைவரையும் எதிர்த்து போராடுவேன் என உறுதியாக கூறுகிறேன். எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகின்றதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என்று முழங்கியவன் நம் குலத்தின் மன்னன், இவ்வுலகின் பரமாத்மா ஸ்ரீகண்ணபிரான். பகவானின் பாதையிலேயே சிறு மாறுதலோடு யாதவர்களுக்காக நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எங்கெல்லாம் யாதவனுக்கு அநீதி நடக்கின்றதோ அங்கெல்லாம் இந்த தாமோதிரன் சென்று தீர்த்து வைப்பான். உரிய நீதியை பெற்றுத்தருவான் என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுளேன்.
இங்ஙனம்
B.R.தாமோதரன் யாதவ் 9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty
No comments:
Post a Comment