Saturday, March 22, 2014

அழிவை நோக்கி திராவிட முனேற்ற கலகம்..!

இந்த 'தி.மு.க.,வை யாரும் அசைக்க முடியாது; வீழ்த்த முடியாது' என்று, அழகிரியை நீக்கிய நாளிலிருந்து, 'கிலி' பிடித்து, புலம்ப ஆரம்பித்துள்ளார், கருணாநிதி.தின்ற நஞ்சு, எரிக்கும் தான். செய்த பாவத்தின் பலனை, அனுபவிக்கப் போகிறார், யாதவர்களுக்கு செய்த பாவத்தினால் அவர்களின் சாபம் கருணாநிதி குடும்பத்தை மட்டும் அல்லாமல் கட்சியையும் சேர்த்து ஆட்டுவிக்கிறது. ஆரம்பித்து விட்டதுஅஸ்தமனப் படலம்! கருணாநிதி.'ஊர் ரெண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என, தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளையும், இரண்டுபடுத்தியதோடு மட்டுமின்றி, சில கட்சிகளை, வேரோடும், வேரடி மண்ணோடும், வீழ்த்தி அழித்த பெருமை, கருணாநிதியையே சேரும்.இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாத்ற்க்கு ஒரு யாதவர்க்கு கூட வாய்ப்பு வழங்காமல் தனது அரசியல் சாணக்கிய தனத்தை காட்டியுள்ளார் அரசியல் கட்சிகளை மட்டுமல்லாமல், அனைத்து அரசு அலுவலர்கள் சங்கங்களையும், பல கூறுகளாக உடைத்து, அந்த இயக்கங்களை அழித்து, ஒழித்து, வீழ்த்தி புகழ் பெற்றவரும், கருணாநிதி தான்.இவ்வளவு கொடுமைகளை செய்ததால், 'தன்வினை தன்னைச் சுடும்' என்று, தற்போது, பயப்பட ஆரம்பித்துள்ளார்.தி.மு.க.,வை அழிக்க, வேறு யாரும் தேவையில்லை. கருணாநிதியின் குடும்பத்தாரே போதும். அதுவும், கருணாநிதியின் காலத்திலேயே, அவரது கண் முன்னாலேயே, வாரிசுகளின், தலைக்குத் தலை நாட்டாண்மையால், தி.மு.க., பல கூறுகளாகி, அழியப் போவது உறுதியாகி விட்டது.ஆரம்பமாகி விட்டது, தி.மு.க.,வின், அஸ்தமனப்படலம் என்பதை, நன்கு உணர்ந்து விட்டார் கருணாநிதி. அதனால் தான், 'தி.மு.க.,வை யாரும், அசைக்க முடியாது; வீழ்த்த முடியாது' என்று, ஓயாமல் புலம்பி வருகிறார்.அந்தோ பரிதாபம்... முற்பகலில், தான் செய்த பாவத்தின் பலனை, பிற்பகலான தற்போது, அனுபவிக்க துவங்கியுள்ளார் கருணாநிதி. தன் நிழல் தன்னோடு; தன் பாவம் தன்னோடு! என்பது இவரது வாழ்வில் சரியாக பொருந்தி உள்ளது.

இப்படிக்கு

தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment